search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய வானிலை ஆய்வு மையம்"

    • தெற்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.
    • வங்கக்கடலில் புயல் உருவாகும் பட்சத்தில் "மிச்சாங்" என பெயர் வைக்கப்படும்.

    புதுடெல்லி:

    தெற்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின், அடுத்த 48 மணி நேரத்தில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. வங்கக்கடலில் புயல் உருவாகும் பட்சத்தில் "மிச்சாங்" என பெயர் வைக்கப்படும்.

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
    • புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் அந்தமான் தீவுகளில் மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.

    சென்னை:

    தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி 26-ந்தேதி உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 29-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    ஆனால் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு அந்மான் கடல் பகுதியில் உருவாவதற்கான சாத்திய கூறுகள் தாமதம் ஆயின. இன்று 27-ந்தேதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாவதில் மேலும் தாமதம் ஏற்பட்டது.

    சூறாவளி சுழற்சியானது தற்போது தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உள்ளது. மேலும் சராசரி கடல் மட்டத்தில் இருந்து 5.8 கி.மீ. வரை சுழற்சி நீண்டுள்ளது. அதன் தாக்கத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாக வாய்ப்பு உள்ளன.

    இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 29-ந்தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக அந்தமான் தீவுகளில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும். எனவே 29-ந்தேதி முதல் டிசம்பர் 2-ந்தேதி வரை தென்கிழக்கு வங்காள விரிகுடா, மத்திய வங்காள விரிகுடா பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேணடாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும். நாளை (28-ந்தேதி) முதல் 2-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை மற்றும் புறநகரில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் பருவமழை மேலும் தீவிரம் அடைகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது.

    குறிப்பாக டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், கடலோர தமிழகப் பகுதிகளில் கன மழை பெய்தது. சென்னையில் 2 நாட்கள் பலத்த மழை கொட்டியது.

    அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்து புயலாக மாறி ஒடிசா, மேற்கு வங்கம் கடல் பகுதிக்கு நகர்ந்து சென்றதால் தமிழகத்தில் எதிர்பார்த்த மழை பெய்யாமல் குறைந்தது.

    இந்த நிலையில் குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 24-ந்தேதி வரை அநேக இடங்களில லேசான மழையும், ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் 22, 23 மற்றும் 24-ந் தேதியில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.

    இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் இன்று லேசான மழை பெய்யும்.

    செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னையில் நள்ளிரவு மற்றும் அதிகாலையில் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் பருவமழை மேலும் தீவிரம் அடைகிறது. அடுத்து வருகின்ற 4 நாட்களுக்கு கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பேரிடர் மேலாண்மை துறை மற்றும் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் முன்எச்சரிக்கையுடன் மழையை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று முதல் 6ந்தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
    • நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    புதுடெல்லி:

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 6ந்தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் நாளை கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மாநிலம் முழுவதும் மழை பெய்யும்.
    • 11 மாவட்டங்களில் 6 முதல் 11 செ.மீ. வரை மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மாநிலம் முழுவதும் மழை பெய்யுமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 11 மாவட்டங்களில் 6 முதல் 11 செ.மீ. வரை மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சூரிய ஒளி உடலில் நேரடியாக படுவதை தவிர்க்க வேண்டும்.
    • பகலில் மது, காபி, டீ மற்றும் கார்பன் ஏற்றப்பட்ட பானங்கள் உள்ளிட்டவைகளை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கம்போல் தொடங்காமல் தாமதமாக தொடங்கியது. அப்போது அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. சில மாவட்டங்களில ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    ஆனால் பருவமழை சில வாரங்களே நீடித்தது. அதன்பிறகு மழை பெய்யவில்லை. இதனால் வழக்கத்தை விட அங்கு வெயில் அதிகமாக அடித்தது. இந்தநிலையில் கேரள மாநிலத்தில் இன்றும், நாளையும் அதிக வெப்ப நிலை நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    கேரள மாநிலத்தில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி வரை வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும், 9 மாவட்டங்களில் 34 முதல் 36 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்தில் 36 டிகிரி செல்சியசும், ஆலப்புழா, கோட்டயம் மற்றும் பாலக்காட்டில் 35 டிகிரி செல்சியசும், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் 34 டிகரி செல்சியசும் வெப்பம் பதிவாகும் என்று கூறப்பட்டுள்ளது.

    அதிகரிக்கும் வெப்ப நிலையை கருத்தில் கொண்டு கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய எச்சரிக்கை அறிவுறுத்தல்களையும் வெளியிட்டு இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

    காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சூரிய ஒளி உடலில் நேரடியாக படுவதை தவிர்க்க வேண்டும், நீரிழப்பை தடுக்க கையில் குடிநீர் பாட்டில் வைத்திருக்க வேண்டும், தாகம் இல்லாவிட்டாலும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

    பகலில் மது, காபி, டீ மற்றும் கார்பன் ஏற்றப்பட்ட பானங்கள் உள்ளிட்டவைகளை குடிப்பதை தவிர்க்க வேண்டும், வெளியில் செல்லும்போது தளர்வான மற்றும் வெளிர் நிற ஆடைகள் அணிய வேண்டும், குடை அல்லது தொப்பி பயன்படுத்துவது நல்லது.

    மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளி அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை உடலில் சூரிய ஒளி படுவதை தவிர்க்க வேண்டும்.

    காட்டுத்தீயை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும், பொதுமக்கள் இந்த காலக்கட்டத்தில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.

    மேற்கண்டவை உள்ளிட்ட மேலும் பல்வேறு அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    • புனே, கோலாப்பூர், ராய்காட் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை 27-ந்தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • மும்பையில் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக மும்பையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்நிலையில் புனே, கோலாப்பூர், ராய்காட் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை 27-ந்தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ராய்காட், ரத்னகிரி, சிந்துத்ரக், புனே, கோலாப்பூர் மற்றும் சதாரா மாவட்டங்களில் ஜூலை 27-ந்தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும். மும்பையிலும் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • கேரளாவில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • அதிக மழை பொழிவுக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்களில் பேரிடர் மீட்பு துறையினர் உஷார் நிலையில் இருக்கும்படி மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

    இதன் காரணமாக கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    மேலும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள பிபோர்ஜோய் புயல், அடுத்த 36 மணி நேரத்தில் மீண்டும் தீவிரம் அடைந்து வடகிழக்கு திசையிலும், அடுத்த 3 நாட்களில் வடமேற்கு திசையிலும் நகரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன்காரணமாகவும் கேரளாவில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மாநிலத்தில் அதிக மழை பொழிவுக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்களில் பேரிடர் மீட்பு துறையினர் உஷார் நிலையில் இருக்கும்படி மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா உள்பட 8 மாவட்டங்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    • தென்தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
    • பிபோர்ஜோய் புயல் காரணமாக தென்மேற்கு பருவமழை இயல்புக்கும் குறைவாக பெய்யும் என கூறப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந் தேதி தொடங்கும்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் தாமதமாக நேற்று தொடங்கியது. லட்சத்தீவு, அந்தமான் பகுதியில் தொடங்கிய இந்த மழை கேரளா முழுவதும் பரவலாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கேற்ப நேற்று முதலே மாநிலம் முழுவதும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

    மேலும் இந்த மழை மன்னார் வளைகுடா முதல் தென்தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம் மற்றும் கண்ணூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு வருகிற 12-ந் தேதி வரை மாநில நிர்வாகம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த நாட்களில் மலையோர பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்றும் கடலோர கிராமங்களில் சூறைக்காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுபோல கேரளாவின் பொழியூர் முதல் காசர்கோடு வரையிலான கடல்பகுதியில் கடல் சீற்றம் காணப்படும் என்றும், அலைகள் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு எழும்பும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    பிபோர்ஜோய் புயல் காரணமாக தென்மேற்கு பருவமழை இயல்புக்கும் குறைவாக பெய்யும் என கூறப்பட்டது. ஆனால் இப்போது பிபோர்ஜோய் புயல் காரணமாக பருவமழை பொழிவில் பாதிப்பு இருக்காது என்றும் இயல்பான அளவுக்கு மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநிலம் முழுவதும் கடந்த வாரம் கொட்டித்தீர்த்த கனமழையால் 10 பேர் உயிரிழந்தனர்.
    • தொடர்ந்து பெய்த கனமழையால் ராஜாஜிநகர், வெஸ்ட் ஆப் கார்டு சாலையில் மழைநீர் ஆறுபோல் ஓடியது.

    பெங்களூரு:

    இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக பெங்களூரு உள்ளது. கர்நாடகாவின் தலைநகராக இருக்கும் பெங்களூரு ஆண்டுதோறும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பெய்த கனமழையால் ஐ.டி. நிறுவனங்கள் நிறைந்த பகுதிகள் பெரியளவில் பாதிக்கப்பட்டன. இதனால் பல கோடி ரூபாய்க்கு நஷ்டம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, மைசூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் பெங்களூருவில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில் சுரங்க சாலையில் தேங்கிய மழைநீரில் கார் மூழ்கி இளம்பெண் ஒருவரும், வாலிபர் ஒருவர் ராஜகால்வாயில் சென்ற வெள்ளத்தில் விழுந்தும் உயிரிழந்தனர்.

    மாநிலம் முழுவதும் கடந்த வாரம் கொட்டித்தீர்த்த கனமழையால் 10 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே பெங்களூரு, குடகு, சாம்ராஜ்நகர், துமகூரு, மண்டியா, சிக்பள்ளாப்பூர், சிக்கமகளூரு, ராமநகர் உள்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை பெய்தது. விட்டுவிட்டு பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் ஓடியது. ராஜாஜிநகர், மல்லேசுவரம், ஜெயநகர், யஷ்வந்தபுரம் பகுதிகளில் கனமழை பெய்தது. பிற்பகலில் பெய்ய தொடங்கிய மழை, இரவு முழுவதும் இடைவிடாது கொட்டியது. இதனால் சுரங்க சாலைகளை மழைநீர் மூழ்கடித்தது.

    மேலும் சாலைகளில் ஆறுபோல் மழை வெள்ளம் ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதேபோல் பானசவாடி பகுதியில் சூறை காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரக்கிளை ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக வாகனங்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதேபோல் விஜயநகர், எச்.ஏ.எல். விமான நிலைய சாலைகளில் சில மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அந்த சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து பெய்த கனமழையால் ராஜாஜிநகர், வெஸ்ட் ஆப் கார்டு சாலையில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. மேலும் சாங்கி ரோட்டில் உள்ள சுரங்க சாலையில் வெள்ளநீர் தேங்கியது. அசம்பாவிதங்களை தடுப்பதற்காக சுரங்க சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

    பெங்களூரு வெளிவட்ட சாலையில் மாரத்தஹள்ளி பகுதியில் சாலையில் சுமார் 2 அடிக்கு மழைநீர் தேங்கியது. அதில் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சிரமத்துடன் ஊர்ந்து சென்றன. மேலும் மகாலட்சுமி லே-அவுட், சர்ஜாப்புரா உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் வீடுகளுக்குள் மழைநீருடன், கழிவுநீர் கலந்து சென்றதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இதற்கிடையே பெங்களூரில் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்து கூறியுள்ளது. தற்போது பெங்களூரு மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் அதாவது கர்நாடகாவின் தெற்கு உள்பகுதி மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அடுத்த 5 நாட்களில் கேரளா, லட்சத்தீவுகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான பரவலான மழையும், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசத்தின் தென்பகுதிகளில் பரவலாக மழையும் பெய்யக்கூடும். கர்நாடகாவின் பெங்களூரு, குடகு, மைசூர், உடுப்பி, கலபுரகி, சிவமொக்கா, சித்ரதுர்கா, ஹாசன், சாம்ராஜ்நகர், சிக்கமகளூர், தட்சின கன்னடா மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேவார் புயலின் சுழற்சி காரணமாக தென்மேற்கு பருவமழைக்கான பருவக் காற்று ஓட்டத்தை தடுக்கும்.
    • புயல் வலுவடையும் போது அது தென்சீனக்கடல் பகுதிக்குள் நுழையக்கூடும்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழை பொழிவு இருக்கும்.

    ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். கடந்த ஆண்டு ஒருவாரம் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்த ஆண்டு ஒருவாரம் தாமதமாக பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதற்கேற்ப மழைக்கான அறிகுறிகள் தென்பட்டு வந்தன.

    இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை மேலும் தாமதமாக கூடும் என தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமேட் கூறியுள்ளது. இதுதொடர்பாக இந்நிறுவனத்தின் துணை தலைவர் மகேஷ் பலாவத் கூறியதாவது:-

    பசிபிக் பெருங்கடலில் மேவார் புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் வருகிற 27 அல்லது 28-ந் தேதி கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது ஏற்படும் தாக்கம் காரணமாக அரபிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    மேவார் புயலின் சுழற்சி காரணமாக தென்மேற்கு பருவமழைக்கான பருவக் காற்று ஓட்டத்தை தடுக்கும். புயல் வலுவடையும் போது அது தென்சீனக்கடல் பகுதிக்குள் நுழையக்கூடும். இந்த புயலால் ஏற்படும் பாதிப்பு காரணமாக காற்றின் ஈரப்பதம் உறிஞ்சப்படும். இதன் காரணமாக தென்மேற்கு பருவமழைக்கான மேகங்களை வடகிழக்கு திசை நோக்கி தள்ளும். இதன்காரணமாக இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது மேலும் தாமதமாகலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தனியார் வானிலை ஆய்வு மையத்தின் தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் மறுத்துள்ளது. இவை அனைத்தும் யூகங்களின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளன. அறிவியல் மாதிரிகளின் அடிப்படையில் தெரிவிக்கப்படவில்லை. எனவே தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்த கருத்துக்கள் குறித்து நாங்கள் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை, என கூறியுள்ளது.

    இந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவு அதாவது 96 சதவீதம் அளவுக்கு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால் ஸ்கைமேட் தனியார் வானிலை ஆய்வு மையம், தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக அதாவது 94 சதவீதம் அளவுக்கே பெய்யும் எனக்கூறியுள்ளது.

    • தென் இந்திய தீபகற்ப பகுதிகள் மற்றும் குறிப்பிட்ட சில வடமேற்கு இந்திய பகுதிகளில் மட்டும் இயல்பான அளவிலோ, இயல்பை விட குறைவான அளவிலோ வெப்ப நிலை இருக்கக்கூடும்.
    • பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம், சத்தீஷ்கர், மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை வீசும் நாட்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் 3 மாதங்கள் இயல்பை விட வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில் எப்போதுமே வெயில் வறுத்தெடுக்கும். இந்த ஆண்டு இயல்பை விட வெயில் சுட்டெரிக்கும் என்று தெரிய வந்துள்ளது.

    இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குனர் மிருத்யுஞ்சய் மகாபத்ரா காணொலிக்காட்சி வழியாக நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த ஆண்டு கோடை காலத்தில் (ஏப்ரல்-ஜூன்) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட வெப்ப நிலை அதிக அளவில் இருக்கும்.

    தென் இந்திய தீபகற்ப பகுதிகள் மற்றும் குறிப்பிட்ட சில வடமேற்கு இந்திய பகுதிகளில் மட்டும் இயல்பான அளவிலோ, இயல்பை விட குறைவான அளவிலோ வெப்ப நிலை இருக்கக்கூடும்.

    பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம், சத்தீஷ்கர், மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை வீசும் நாட்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

    ஒரு இடத்தின் சமவெளியில் வெப்ப நிலை குறைந்தபட்சம் 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி பாரன்ஹீட்) அளவுக்கும், கடலோரப்பகுதியில் 37 டிகிரி செல்சியஸ் (98.6 டிகிரி பாரன்ஹீட்) அளவுக்கும், மலைப்பிரதேசங்களில் 30 டிகிரி செல்சியஸ் (86 டிகிரி பாரன்ஹீட்) என்ற அளவில் இருக்கிறபோது அது வெப்ப அலை என அறிவிக்கப்படுகிறது.

    இந்தியாவில 1901-ம் ஆண்டில் இருந்து வெப்பநிலை பதிவு செய்யப்படுகிறது. இந்த கால கட்டத்தில் பிப்ரவரி மாதத்தைப் பொறுத்தமட்டில், கடந்த பிப்ரவரி மாதம் தான் மிகுந்த வெப்பநிலை பதிவாகி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்கள்:-

    * இந்த ஏப்ரல் மாதம் இயல்பான அளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கலாம். 1971 முதல் 2020-ம் ஆண்டு வரையிலான கடந்த காலத்தைப் பார்க்கிறபோது, ஏப்ரல் மாதத்தில் சராசரியாக 39.2 மி.மீ. மழை பெய்திருக்கிறது.

    * இயல்பான அளவு அல்லது அதற்கு அதிகமான மழை நாட்டின் வடமேற்கு, மத்திய, தீபகற்ப பகுதிகளில் எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில் நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் இயல்பை விட குறைவான மழை பெய்யும்.

    இவ்வாறு தெரிய வந்துள்ளது.

    ×